Friday, January 9, 2009
செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் ஆங்கிலத்தில் மட்டும் ஏன்?
செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் வலைத்தளம் ஆங்கிலத்தில் மட்டுமே பெரிதும் இருப்பது ஒரு பெருங் குறையல்லவா. பிற மொழி அறிஞர் தமிழை ஆய உதவுது மிக நன்றே. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழரால் தமிழ் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கான வலைத்தளம் ஆங்கிலத்தில் மட்டுமே பெருதும் அமைந்திருப்பது கபடத்தனமாக தெரிகிறது. தமிழ் இலக்கியங்கள் பெரும்பான்மை மதுரைத் திட்டத்தால் ஏற்கனவே எண்மியப்படுத்தப்பட்டு இணையத்தில் உள்ளன. செய்த வேலையை பிந்தி செய்ய எவ்வளவு கோடி ரூபாக்கள் செலவு. தளமோ 2007 பின் இன்றைப்படுத்தப்படவில்லை. யாருவது பாத்தாத்தானே இன்றைப்படுத்த!
சென்னைச் சங்கமமும் ஆங்கில வலைத்தளமும்
தமிழ் கலைகளின் சங்கமம் என கூறப்படும் நிகழ்வு சென்னைச் சங்கமும். குறிப்பாக தமிழ் நாட்டார் கலைகளின் ஒரு வெளிப்பாட்டு தளமாக அது தன்னை வர்னித்துக் கொள்கிறது. ஆனால் அவர்கள் தமிழுக்கு மதிப்பு தருகிறார்களா? அப்படி மதிப்புத் தந்தால் அவர்களின் வலைத்தளம் ஆங்கிலத்தில் மட்டும் இருக்குமா? அல்லது வலைத்தளத்தை ஆங்கிம் அறிந்த சென்னை மேட்டுக்குடி மக்கள் மட்டுமே பாப்பார்கள் என்று கருதுகிறார்களா? அப்படி என்றால் இது தமிழ் நாட்டார் கலைகளின் வியாபாரமா?
Subscribe to:
Comments (Atom)